டெலிவரி ஊழியர் ஒருவர் தன்னுடைய பிறந்தநாள் உணவுக்காக மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
செப். 11ம் தேதி ஊழியரின் பிறந்த நாள் என்றும், அவர் வீட்டிற்கு வருவதற்காக குடும்பத்தினர் இரவு உணவை தயார் செய்து காத்திருந்ததாகவும் அவரின் மகன் தகவலை பகிர்ந்து கொண்டார்.
“என் அப்பா விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.. வீடியோ ஆதாரம் வேண்டும்” – பதிவில் பிள்ளை உருக்கம்
அப்போது, முன்பின் தெரியாத எண்ணிலிருந்து அவர்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதில் தனது தந்தை டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
ஆனால், ஊழியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மறுநாள் அவரின் உயிர் பிரிந்ததாகவும் மகன் கூறியுள்ளார்.
இந்த திடீர் மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அப்பா – அம்மாக்கு இடையே ஆழமாக அன்பு இருந்தது என்றும் அவர் கண்ணீருடன் கூறினார்.
“இதனால் இந்தச் செய்தி என் தாய்க்கு பலத்த அடியாக இருந்தது” என்று லீயின் மகன் கூறினார்.
எனவே வாகனத்தை ஓட்டும் போது மிகவும் பாதுகாப்பாக இருங்கள் என்பதையும் அவர் பதிவிட்டார்.
விபத்து
கடந்த செப். 11 அன்று அப்பர் அல்ஜூனிட் சாலை மற்றும் Bidadari Park டிரைவ் சந்திப்பில் இந்த விபத்து ஏற்பட்டது.
அதனை அடுத்து மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 46 வயதான அந்த ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் தொடர்புடைய 38 வயதுடைய கார் ஓட்டுநர் விசாரணையில் உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
“வெளிநாட்டவர்கள் இதை மறதியாக கூட செய்யாதீர்கள்” – அபராத எச்சரிக்கை பெற்ற வெளிநாட்டவரின் எச்சரிக்கை