COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 வெளிநாட்டு ஊழியர்களை தங்கள் அறை ஒன்றில் பூட்டிய தங்கும் விடுதி ஆபரேட்டருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர் உரிமைகள் குழு டிரான்சிண்ட் வொர்க்கர்ஸ் கவுண்ட் டூ (TWC2) தனது பேஸ்புக் பக்கத்தில், துவாஸில் அமைந்துள்ள Joylicious தங்கும் விடுதியில் உள்ள ஊழியர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
MOM உடனடியாக ஆய்வாளர்களை தளத்திற்கு அனுப்பியது. அங்கே அவர்கள் வந்தபோது, 20 ஊழியர்கள் தங்கள் அறையில் அடைத்து வைக்கப்படவில்லை, ஆனால் கழிப்பறை உள்ள கிடங்கிற்கு மாற்றப்பட்டிருப்பதை MOM அதிகாரிகள் கண்டறிந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்களை இதுபோன்று வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்குள் அடைத்து வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், உரிமையாளருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் அமைச்சகத்திடம் தெரிவிக்கலாம்.