தெம்பனீஸில் சமீபத்தில் நடந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், S$102,000க்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) இன்று (ஜூலை 6) தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 83க்கு அருகே 65 வயதுமிக்க ஆடவர் ஒருவரையும், 55 வயதுமிக்க பெண் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சிங்கப்பூரரைச் சேர்ந்தவர்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.
இதில் ஆடவரிடம் S$7,000 ரொக்கமும் மற்றும் ஆடவரின் வீட்டில் S$50,929 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக CNB தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற தமிழக ஊழியர்!