விமான நிலைய குப்பைத் தொட்டியில் தங்கம்!

விமான நிலைய குப்பைத் தொட்டியில் தங்கம்!
Photo: Madurai Customs

 

மதுரை விமான நிலையத்தில் பயணி ஒருவர், குப்பைத் தொட்டியில் வீசி சென்ற 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல்களுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது சிங்போஸ்ட்!

சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், பயணி ஒருவரிடம் கடத்தல் தங்கம் உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளுடன் சுங்க இலாக்கா வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கட்டுமான ஊழியரை படுத்த படுக்கையாக போட்ட கோர சம்பவம் – நிறுவனத்தின் இயக்குனர் மீது பாய்ந்த சட்டம்

அப்போது பயணிகளிடம் இருந்து தங்கம் எதுவும் சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், அதில் இருந்து 899 கிராம் தங்கம் கண்டெடுக்கப்பட்டது. உருண்டை வடிவத்தில் இருந்த 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை குப்பைத் தொட்டியில் வீசிய நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.