யிஷுன் பிளாட்டில் இன்று (நவ. 14) காலை தீ விபத்து ஏற்பட்டதில் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காலை 9.45 மணியளவில் பிளாக் 424A யிஷுன் அவென்யூ 11இல் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் தோ பாயோவில் பேருந்தின் கீழே சிக்கிய ஆடவர்.
தீ விபத்துக்கான முதற்கட்ட விசாரணையில், மின் சைக்கிளுக்கு சார்ஜ் செய்யும்போது அந்த சாதனத்தில் தீப்பற்றிக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பிளாட்டில் இருந்த இரண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் படுக்கையறையிலும் மற்றவர் கழிப்பறையிலும் இருந்ததாக SCDF தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, அந்த பிளாக்கில் இருந்து 40 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இதில் மீட்கப்பட்டவர்களில் ஒருவர் தீக்காயங்களுடன், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு (SGH) கொண்டு செல்லப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் கப்பலில் விழுந்து காயமடையந்த ஊழியர்…SCDF உதவி.