சிங்கப்பூரில் இருந்து வந்த தகவலால் அலறும் இந்தியா! அடுத்து என்ன நடக்கப்போகிறது?

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 8.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது உறுதி என சிங்கப்பூர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இமயமலையில் நீண்ட நாட்களாக சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தாலும் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படவில்லை.

குறிப்பாக வடமேற்கு இமயமலைப் பகுதியில் நீண்ட நாட்களாக பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்படவில்லை.

இதற்கு முன்னர், 1905 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தின் காங்க்ராவில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து 1934, ஜனவரி 15 அன்று பிகார் – நேபாள எல்லையில் 8.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்கு பிறகு வடமேற்கு இமயமலைப் பகுதியில் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை. இதுபோன்ற நிலையில், உத்தரகாண்ட்டில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகின்றனர்.

அதிலும் ரிக்டர் அளவுகோலில் 8 க்கும் அதிகமான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால் எப்போது வரும் என்பது உறுதியாக தெரியவில்லை. எவ்வாறு இருந்தாலும் அது கண்டிப்பாக வரும் என்கிறார், சிங்கப்பூர் ஆசிய நில அதிர்வு ஆணையத்தின் இயக்குநர் பரமேஷ் பானர்ஜி.

அதிக நிலநடுக்கம் உண்டாகும் ஜப்பானில் 2,000 க்கும் மேற்பட்ட ஜிபிஎஸ் அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் அதிக நிலநடுக்கம் உணரப்படும் இமயமலைப் பகுதியில், அத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை எனவும் பரமேஷ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.