இந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் அதன் பெரும்பாலான கோவிட் -19 நடவடிக்கைகளை எளிமையாக்கும் திட்டங்களை நெதர்லாந்து அறிவித்துள்ளது என Reuters கூறியுள்ளது.
நெதர்லாந்து சுகாதார அமைச்சர் எர்ன்ஸ்ட் குய்ப்பர்ஸ் கூறுகையில்; பிப்ரவரி 18 முதல், நாட்டில் உள்ள பார்கள் மற்றும் உணவகங்களில் விதிக்கப்பட்டுள்ள தற்போதைய நேர வரம்பு பழைய நிலைக்கு மாறும் என்றார்.
அதாவது இரவு 10 மணி வரை உள்ள நேர வரம்பு வரம்புக்கு பதிலாக நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்கும் என்று அவர் கூறினார்.
கூடுதலாக, 500 வருகையாளர்கள் வரை தங்கக்கூடிய இடங்களில் இனி பாதுகாப்பு இடைவெளி விதிகள் இருக்காது என்று டச்சு செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வருகையாளர்கள் தடுப்பூசி நிலை, சமீபத்தியதொற்றிலிருந்து குணமடைந்த விவரம் அல்லது “நெகடிவ்” சோதனை முடிவு ஆகியவற்றின் ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.