ஈஸ்ட் கோஸ்ட் பார்க் நீர்ப்பரப்பில் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் சடலம் ஒன்று போலீசாரால் மீட்கப்பட்டது.
அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இரண்டு பேர் கடலில் காணாமல் போனதாகவும், இன்னொருவர் நபர் மீட்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கடந்த டிச. 10 அன்று இரவு 7:10 மணியளவில் நீரில் மூழ்கி இறந்ததாகச் சந்தேகிக்கப்படும் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து, அடுத்த நாள் டிசம்பர் 11-ம் தேதி அன்று ஆடவரின் சடலம் அங்கிருந்து இருந்து மீட்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் சதிச் செயல் ஏதும் இல்லை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.