தமிழக அமைச்சர் கே.என்.நேருவுடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

தமிழக அமைச்சர் கே.என்.நேருவுடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!
Photo: TN Govt

 

மே 16- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை இந்தியாவிற்கான சிங்கப்பூர் நாட்டுத் தூதர் எட்கர் பாங் (Edgar Pang) அவர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது, சிங்கப்பூர் தூதர் மற்றும் துணைத் தூதர் ஆகியோருக்கு அமைச்சர் பட்டு துண்டை அணிவித்து வரவேற்றார்.

வாட்ஸ்அப்பில் வந்தது செம்ம அப்டேட் – இனி தனி தனியாக லாக் செய்யலாம்: இப்போதே அப்டேட் செய்யுங்க

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் துணைத் தூதர் பசில் டிங் (Basil Ting), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார் இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் பா.பொன்னையா இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.