பலத்த சத்தம்.. கீழே விழுந்த பெண் மற்றும் ஒரு வயது குழந்தை – சம்பவ இடத்திலேயே மரணம்

eunos-woman-baby-fall-death
Lianhe Zaobao

யூனோஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 33 வயது பெண் ஒருவரும், ஒரு வயது குழந்தையும் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) பிற்பகல் 12:40 மணியளவில் பிளாக் 35 யூனோஸ் கிரசென்ட்டில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

PM Lee: பொதுத் தேர்தலுக்கு முன்பே பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கவிருக்கும் பிரதமர் லீ

அந்த பெண் மற்றும் கைக்குழந்தை ஆகிய இருவரும் அசைவில்லாமல் கிடந்ததாகவும், இதனை அடுத்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்ததும் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் கூறினர்.

குழந்தை டயபர் அணிந்த நிலையில் இருந்ததாகவும், அவர்கள் தாயும் மகளும் என்று நம்பப்படுவதாகவும் நேரில் கண்ட சாட்சி Lianhe Zaobao விடம் கூறினார்.

பலத்த சத்தம் கேட்டதாகவும், என்னவென்று எட்டிப்பார்த்தபோது கட்டிடத்தில் இருந்து இரண்டு பேர் கீழே விழுந்ததைக் கண்டதாகவும் நேரில் கண்ட சாட்சி கூறினார்.

அவர்கள் நான்காவது மாடியில் வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதில் சதிச்செயல் ஏதும் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கவில்லை.

சிங்கப்பூரின் வரலாற்று சிறப்புமிக்க தீமிதி திருவிழா இன்று…