மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (அக்.19) சிங்கப்பூருக்கு வருகைத் தந்துள்ளார்.
பயணிகளின் லக்கேஜ்களை இறக்காமல் வேறு பயணிகளுடன் மீண்டும் இந்தியா பறந்த இண்டிகோ விமானம்
அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “எனது நண்பர் பாதுகாப்புத் துறை அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் தூதர்கள் மாநாட்டில் உரையாற்றியதற்கு அவருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்த சிங்கப்பூர் தூதர்!
அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் இன்று (அக்.19) நடைபெற்ற ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய தூதர்களின் பிராந்திய மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டிற்கு சிங்கப்பூர் பாதுகாப்புத் துறை அமைச்சர் தலைமைத் தாங்கி சிறப்புரையாற்றினார்.