மனைவியை கொடுமை செய்து தாக்கிய ஆடவர்… அலேக்கா தூக்கிய போலீஸ்

family-violence wife alarm
photo: Try Sutrisno Foo

சிங்கப்பூரில் கொடுமை செய்து மனைவியைத் தாக்கியதற்காக 57 வயதுமிக்க ஆடவர் மீது குற்றம் சாட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.

தகராறு ஏற்பட்டபோது ​​அந்த ஆடவர் தனது மனைவியிடம் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி, அவரது கையை இரண்டு முறை முறுக்கித் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் அந்த ஆடவரிடம் விசாரணை நடந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக அளவில் வேலை: கட்டுமானம், உற்பத்தியில் வேலைவாய்ப்பு அமோகம்

அந்த ஆடவர் மீது நேற்று (அக்.27) அச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடிய தவறான வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டது.

அச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடிய தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தும் குற்றத்திற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

டாக்ஸி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு சிறை