கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் கடுமையாக மோதிய பேருந்து… சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பலி

fatal-bus-collision-hougang-depot
screenshot from izmiey18191/TikTok

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மரத்தில் மோதியதில் 54 வயதான SBS ட்ரான்ஸிட் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

நேற்று (அக். 9) நள்ளிரவு 2:47 மணிக்கு ஹௌகாங் அவென்யூ 3 நோக்கி செல்லும் டெஃபு அவென்யூ 1ல் இந்த விபத்து நடந்ததாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்தது.

சிங்கப்பூரில் இன்று முதல் நீக்கப்படும் கட்டுப்பாடுகள் – ஊழியர்களுக்கும் தளர்வுகள் அறிவிப்பு

காலியான ஊழியர்களுடன் அந்த பேருந்து ஹௌகாங் டிப்போவுக்கு திரும்பியது, அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிப்போவுக்கு வெளியே உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று SBS டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்து ஓட்டுநர் பக்கமே பலத்த சேதம் என்றும், மேலும் இதனால் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர் உறுதி செய்தனர்.

SBS ட்ரான்சிட் துணைத் தலைவர் கிரேஸ் வு; பேருந்து ஓட்டுனரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

“இந்த கடினமான நேரத்தில் அவரின் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குகிறோம்” என்றும் அவர் கூறினார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நீண்ட வரிசை – பயணிகள் கடும் அவதி