தனது 13 வயது நிரம்பிய சொந்த மகளின் நிர்வாண தோற்றத்தை படம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிறுமியின் படுக்கையறையில் ரகசிய கேமரா பொருத்திய கொடூர தந்தைக்கு 18 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு 1 பிரம்படியும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
43 வயதுமிக்க அந்த தந்தை, கடந்த 2020ஆம் ஆண்டு ஜூரோங் வீட்டில் உள்ள சிறுமியின் அறையில் ரகசிய கேமரா வைத்து, மகள் உடை மாற்றுவதையும், நிர்வாண தோற்றத்தையும் கைபேசி வழியாக பார்த்துள்ளார்.
அதன் பின்னர் தமது கணவனின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மனைவி, இதனை அறிந்து காவல்துறையிடம் அதே ஆண்டில் இது பற்றி புகார் செய்தார்.
இந்நிலையில், கொடூர தந்தைக்கு 18 வார சிறைத்தண்டனையும், 1 பிரம்படியும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை காக்கும் வகையில் அவரின் விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர்களிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல் – அதிகாரிகள் அதிர்ச்சி