சிங்கப்பூர், கன்டோன்மென்ட் சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) காலை, மின்-சைக்கிளும் மசெராட்டி காரும் சம்மந்தப்பட்ட விபத்தில் 69 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக (25 வயது) கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ஆஸ்திரேலிய டாலர் பறிமுதல்; அதிகாரிகள் விசாரணை..!
பவர் அசிஸ்டட் சைக்கிள் (இ-பைக்) சவாரி செய்து கொண்டிருந்த அந்த பெண்மணி, சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக துணை மருத்துவர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அதிகாலை 5.25 மணியளவில் கன்டோன்மென்ட் சாலையில் (Keppel சாலை வழியில்) போலீசார் எச்சரிக்கப்பட்டனர்.
மேலும், இந்த விபத்து குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க : சிங்கப்பூரின் பழமையான MRT பாதைகள் புதுப்பித்தல் பணி..!