ஆர்ச்சர்ட் MRT ரயில் நிலையத்தில் இருவர் சண்டையிட்டுகொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மே 11 அன்று இரவு சுமார் 10:40 மணியளவில் நடந்த இந்த சண்டை தொடர்பான வீடியோவை மதர்ஷிப் பகிர்ந்து கொண்டுள்ளது.
WWE குத்துச்சண்டையில் வருவது போல, இருவரும் அடித்துக்கொள்ளும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தொழிற்சாலையில் கரப்பான் பூச்சி, எலி.. முதலாளிக்கு S$18,000 அபராதம்
அங்கிருந்த பொதுமக்களில் இருவர் அவர்களை தடுப்பதையும், அதையும் மீறி அவர்கள் சண்டையிட்டுக்கொள்வதையும் வீடியோவில் காண முடிகிறது.
அதிலும் ஒருவர் கையில் போனுடன் வீடியோ எடுத்துக்கொண்டு நிற்பதையும் காண முடிகிறது.
இந்த சம்பவம் குறித்து அன்று இரவு 10:46 மணிக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
அதனை அடுத்து, 33 மற்றும் 35 வயதுடைய அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் இனி அதிவேக இன்டர்நெட் – மிரட்டும் வேகம் விரைவில்