சிங்கப்பூர்: பிளாக் 213 மார்சிலிங் கிரசன்ட்டில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை (நவம்பர் 5) இரவு 10.10 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
விமான கட்டணம் குறையும்.. போட்டி குறித்த கவலை – SIA எடுத்துள்ள அதிரடி முடிவு
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்றாவது மாடி அறையில் தீ ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விரைந்து வந்த SCDF வீரர்கள் தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் SCDF கூறியுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
தீ விபத்து தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டன.
தலைக்கு S$7 மில்லியன் பரிசு: துப்பு தேடும் போலீஸ் – சிங்கப்பூர் ஆடவருக்கு வலை