பிடோக்கில் உள்ள HDB குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கிய மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய ஊழியர் கண்டெய்னர்களுக்கு இடையே சிக்கி மரணம்: கனரக வாகன ஓட்டுநருக்கு சிறை
இன்று வெள்ளிக்கிழமை காலை 6.35 மணியளவில் பிளாக் 409 பிடோக் நார்த் அவென்யூ 2ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து, தகவல் கிடைத்த வெறும் ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த SCDF வீரர்கள், தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
இதில் குழந்தை உட்பட மூன்று பேர் படுக்கையறையில் இருத்ததாகவும், ஒருவர் வீட்டின் கூடத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வீட்டின் கூடத்தில் கண்டெடுக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் உறுதிசெய்தனர்.
படுக்கையறையில் இருந்த 3 பேர் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்துக்கு குடியிருப்பு பகுதிகளில் இருந்து 60 பேர் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தை சேர்த்த ஓட்டுனருக்கு லாரி ஓட்டத் தடை – S$1,000 அபராதம் விதிப்பு