மின்விசிறியில் தீ: விரைந்து சென்ற SCDF – உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது!

Photo Credit: ST reader

சிங்கப்பூரில் இன்று (ஜன.09) பிளாக் 113 பிஷான் ஸ்ட்ரீட் 12இல் உள்ள ஓர் வீட்டின் மின்விசிறியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) மதியம் 1.35 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சைனாடவுன் பாயின்ட் மாலின் 4வது மாடியில் இருந்து விழுந்த ஊழியர் மருத்துவனையில் அனுமதி (வீடியோ)

அதாவது, இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருந்த மின்விசிறியில் தீ விபத்து ஏற்பட்டது.

அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த SCDF வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

இந்த விபத்தினால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”