அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 5 பேர் மருத்துவமனையில்…அதிகமான மக்கள் வெளியேற்றம்!

SCDF/Facebook

புக்கிட் மேராவில் உள்ள HDB பிளாக்கின் வீட்டு அறை ஒன்றில் நேற்று புதன்கிழமை (மார்ச் 30) ​​தீ விபத்து ஏற்பட்டது.

இதில் ஐந்து பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு பயணம் இனி இலகுவாகும்…தனிமை, பரிசோதனை இல்லை – தொற்றுக்கு முன் இருந்த வசந்த காலம்!

பிளாக் 121 புக்கிட் மேரா வியூவில் காலை 11.45 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.

தீ விபத்தினால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் புகை காரணமாக வீட்டின் அறை பாதிக்கப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

மேலும், SCDF வீரர்கள் வருகைக்கு முன்னர் பாதிக்கப்பட்ட பிரிவைச் வீட்டை சேர்ந்த இரண்டு பேர் தானாகவே வெளியேறியதாக அது கூறியது.

“கூடுதலாக, பின்னர் பாதிக்கப்பட்ட பிளாக்கில் இருந்து சுமார் 35 பேர் காவல்துறை மற்றும் SCDF வீரர்களால் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என SCDF தெரிவித்துள்ளது.

“டெர்மினல் 2 படிப்படியாக திறக்கப்படும்”: எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதால் விமான நிலைய ஆட்சேர்ப்பு அதிகரிக்கும்!