கத்திக்குத்து தாக்குதல்: போலீஸ் தேடுதல் வேட்டையில் மேலும் ஐவர் கைது

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூரில் இந்த மாத தொடக்கத்தில் கிளெமென்டியில் நடந்த கத்தி குத்து தாக்குதல் தொடர்பாக மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் வியாழக்கிழமை (ஜனவரி 27) தெரிவித்தனர்.

முன்னதாக, பிளாக் 413 காமன்வெல்த் அவென்யூ வெஸ்டில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவரின் இடது கையில் வெட்டுக் காயமும், அவரது முதுகில் குத்து காயமும் ஏற்பட்டது.

வெளிநாட்டு ஊழியருக்கு மரணம் ஏற்படுத்திய நிறுவனம், மேலாளர் மீது குற்றச்சாட்டு

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளில், தாக்குதலுக்கு ஊக்குவித்ததாக சந்தேகிக்கப்படும் வகையில் 22 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜனவரி 18 முதல் ஜனவரி 25 வரை நடந்த அதிரடி வேட்டையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் நான்கு பேர் இந்த ஆயுதம் ஏந்திய தாக்குதலில் இடைத்தரகர்களாக இருந்ததாக நம்பப்படுகிறது.

மீதமுள்ள இருவர் தற்போது காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

நிர்வாண டிக்டாக் காணொளி.. வீட்டுப் பணிப்பெண் செய்த கூத்து – சிறையில் அடைத்த போலீஸ்