சிங்கப்பூரில், ஆடவர் ஒருவர் குளிக்கும் டிக்டாக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து 33 வயது வீட்டுப் பணிப்பெண் ஒருவர் முன்னர் கைது செய்யப்பட்டார்.
மிகவும் மோசமான பார்வை குறைவு உட்பட மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட முதியவரைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்துள்ளார் அந்த வீட்டு பணிப்பெண்.
கோயில் வாசலில் குழந்தை மீது பலகையை தட்டி விட்டு தாக்குதல் (வீடியோ): போலீசார் கடும் எச்சரிக்கை
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், குளியலறையில் வைத்து முதியவரை பல சந்தர்ப்பங்களில் நிர்வாணமாக பணிப்பெண் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அந்த அந்தரங்க வீடியோக்களை வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு அனுப்பியுள்ளார் அந்த பணிப்பெண், மேலும் அவரது பிறப்புறுப்பை வெளிக்காட்டாதவாறு மற்றொரு வீடியோவையும் அவர் TikTokல் வெளியிட்டார்.
இந்நிலையில், அந்த 33 வயதான இந்தோனேசிய பணிப்பெண்ணுக்கு இன்று (ஜனவரி 27) 17 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.