திருச்சி-சிங்கப்பூருக்கு இடையே செல்ல வேண்டுமா? சமீபத்திய விமான அப்டேட்

Singapore Trichy flight

கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் தளர்த்தியுள்ளதால், இந்தியர்கள் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முடியும்.

இந்தியாவைத் தவிர, மற்ற ஐந்து தெற்காசிய நாடுகளை தனது பயணக் கட்டுப்பாடு பட்டியலில் இருந்து நீக்குவதாக சிங்கப்பூர் அறிவித்தது.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு இந்த நவம்பர் மாதத்திற்கான அப்டேட்

இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்-திருச்சிராப்பள்ளி இடையே புதன்கிழமைகளில் கூடுதல் வாராந்திர விமானங்களைச் இயக்க உள்ளது.

இந்த நவம்பர் மாதம் 3, 10, 17, 24 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் அந்த கூடுதல் விமானங்கள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவில் இருந்து செல்லும்/ இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டன.

சர்வதேச விமானங்களை இயக்க இந்தியா 25க்கும் மேற்பட்ட நாடுகளுடன் Air bubble பயண ஏற்பாடுகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: லாரி பயணத்திற்கு மாற்றாக வரும் மினி பேருந்து..