ஸ்கூட் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… பாங்காக்கிற்கு மீண்டும் திரும்பிய விமானம்!

 

மே 8- ஆம் தேதி அன்று மாலை 04.56 PM மணிக்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் சர்வதேச விமான நிலையத்தில் (Bangkok International Airport) இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு (Scoot Airlines) சொந்தமான ஏர்பஸ் A321 ரக விமானம், 230 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டது.

பிளீஸ்..! இனி நம்ம ஆட்கள் மேல் எப்படி மதிப்பு வரும்..? சிங்கப்பூரை திணறடிக்கும் லிட்டில் இந்தியா!

விமானம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த நிலையில், விமானத்தின் குளிரூட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நீர் ஆவிகள் புகைபோல் விமானத்திற்குள் பரவின. இதனால் விமானத்தில் பயணிகள் அலறியடித்தனர். இதையடுத்து, விமானி விமானத்தை மீண்டும் பாங்காங் விமான நிலையத்திற்கு திருப்பினார்.

சிங்கப்பூரில் லஞ்சம் வாங்கிய இந்திய வம்சாவளிக்கு சிறைத் தண்டனை!

பின்னர், விமானத்தின் குளிரூட்டியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டப் பின், விமானம் இரவு 07.27 PM மணிக்கு பாங்காக்கில் இருந்து புறப்பட்டு இரவு 10.26 PM மணிக்கு சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.