சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டு ஊழியர்.. மடக்கி பிடித்த அதிகாரிகள்

foreign man arrest illegal entry into singapore
ICA/Facebook

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டு ஆடவரை அதிகாரிகள் பிடித்தனர்.

அவர் பங்களாதேஷைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவரை குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 9) கைது செய்தனர்.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$5.8 மில்லியன் ஹிமாலய பரிசை தட்டி சென்ற ஒரே ஒருவர்!

அவர் காஸ்வேயில் ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வதைக் அதிகாரிகள் கண்டு வளைத்து பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

சோதனை செய்ததில் அவரிடம் அசல் அடையாள ஆவணங்கள் அல்லது பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

அவரால் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கண்ணோட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக ICA அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைவதை அதிகாரிகள் கடுமையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.