சிறுவர்கள் அடங்கிய ஆபாசக் காணொளிகளை பகிர்ந்த வெளிநாட்டு ஊழியருக்குச் சிறை..!

Foreign worker jailed crime child pornography

ஆன்லைன் குழுவில் ஆபாசமான காணொளிகளைப் கண்ட நபர் ஒருவர், அதில் சிறுவர் அடங்கிய ஆபாசத்தின் இரண்டு காணொளிகளை ஒரு வாட்ஸ்அப் குழு ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பு (இன்டர்போல்) இதனை கண்டறிந்தது. பின்னர், சிங்கப்பூர் காவல் படையின் கவனத்திற்கு இந்த குற்றம் கொண்டு வரப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல் – தூதரகம்..!

அந்த காணொளிகளை பகிர்ந்த 36 வயதான ஜாஹிதூலுக்கு நேற்று (அக். 8) ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட அவர், சிங்கப்பூரில் பணிபுரிந்த பங்களாதேஷ் ஊழியர் ஆவார். அவரைக் காவல்துறை ஒரு வாரத்திற்குப் பிறகு கைது செய்தது.

மின்னணு வழி ஆபாச காணொளிகளை அனுப்பியது மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விடயங்களை வைத்திருந்த தொடர்பான குற்றச்சாட்டுகளை பங்களாதேஷ் கட்டுமானத் ஊழியர் ஒப்புக்கொண்டார்.

மேலும், 1197 ஆபாச காணொளிகளை வைத்திருந்த மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதில் 83 காணொளிகளில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் காணொளிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன, ஒன்று முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அதில் இடம்பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபாசக் காட்சிகளை இணையம் வழி பகிர்ந்ததற்கு அவருக்கு மூன்று மாதம்வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

குழைந்தைகள் தொடர்பான காட்சிகளை வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு 5 ஆண்டு வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படியோ விதிக்கப்பட்டிருக்கலாம்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் 4.5 விழுக்காடாக உயர்வு.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…