வெளிநாட்டு ஊழியர்கள், விடுதிகளுக்கு பணியாற்றும் MOM அதிகாரி… சிறுமியிடம் சில்மிஷ வேலை – பிடித்து சிறையில் அடைத்த போலீஸ்

caning
Pexel

மனிதவள அமைச்சகத்தின் (MOM) வீட்டுவசதி அதிகாரி ஒருவர் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.

சிறுமியும் அவரது எட்டு வயது சகோதரனும் தோ பாயோவில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அதிகாரி அவர்களைக் கண்டார்.

இருவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், இருவரின் வீடு வரை பின்தொடர்ந்து சென்று, அங்கு சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

செந்தோசா வானில் திடீரென தோன்றிய மர்மமான கருப்பு வளையம்: “என்னவா இருக்கும்” – குழப்பத்தில் பொதுமக்கள்

சிறுமி அழத் தொடங்கியதும் அதிகாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார், பின்னர் இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், 57 வயதான லோ பிண் என்ற அவர் பாலியல் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனை அடுத்து இன்று அவருக்கு ஒரு வருடம் மற்றும் ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

My Careers Future இணையதளத்தின்படி; MOM வீட்டுவசதி அதிகாரிகளின் வேலை என்பது தங்கும் விடுதி ஆபரேட்டர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் முதலாளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து கடமைகளைச் செய்வதாகும்.

வெளிநாட்டு ஊழியர்களின் குடியிருப்புகளையும் அவர்கள் ஆய்வு செய்கின்றனர்.

அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு… தெறித்த மக்கள் – நீண்ட நேரம் போராடி மீட்ட ACRES வீரர்கள்