சோவா சூ காங்கில் சீனப் புத்தாண்டுக்காக அலங்கரிக்கப்பட்ட விளக்குகளைச் சுற்றி மாலைபோல தொங்கிய மலைப்பாம்பை கண்டு பொதுமக்கள் அலறியடித்தனர்.
தரையில் இருந்து நான்கு முதல் ஐந்து மீட்டர் உயரத்தில் சுருண்டிருந்த மலைப்பாம்பு குறித்து ACRES அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி… முன் அனுமதி இல்லாமல் பொருளை கொண்டு வந்து பிடிபட்ட நபர்
நேற்று முன்தினம் ஜனவரி 7 ஆம் தேதி சனிக்கிழமை காலை பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து ACRES அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பின்னர் வந்த ACRES விலங்குநல அமைப்பு நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பை மீட்டது.
மீட்கப்பட்ட மலைப்பாம்புக்கு காயம் ஏதும் இல்லை என ACRES இணை தலைமை நிர்வாக அதிகாரி கலை வாணன் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் முனையில் பெண்ணை சிறைப் பிடித்த நபர் – வளைத்து பிடித்த போலீசார்