ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வயல் வெளியில் ஓய்வெடுக்கும் வெளிநாட்டு ஊழியர்களை ஆடவர் ஒருவர் பல மாதங்களாக உளவு பார்ப்பதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் அவர் அவ்வாறு செய்வதாகவும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு ஜோடி பைனாகுலருடன் (binoculars) பாலத்தில் அமர்ந்திருப்பது குறித்தும் அதன் வாசகர் கவனித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது அந்த பாலம், ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 13ல் Blk 114 க்கு அருகில் அமைந்துள்ளது.
பான் தீவு அதிவிரைவு சாலையில் 7 கார்கள் மோதி கோர விபத்து; இருவர் மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில், புலம்பெயர்ந்த ஊழியர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களிடையே பிக்னிக் மற்றும் விளையாட்டுகளுக்கு அந்த இடம் பிரபலமானது.
“ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நான் என் அம்மா வீட்டிற்குத் செல்லும்போது, அவர் அந்த பாலத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு பைனாகுலரைப் பயன்படுத்தி அவர்களை பார்த்துக்கொண்டு இருப்பார்” என்று ஷின் மின் வாசகர் கூறியுள்ளார்.
யாரேனும் அவர் பக்கம் கடந்து செல்வதை உணர்ந்தால், பைனாகுலரைப் கீழே வைத்துவிட்டு சாதாரணமாக இருப்பார் அவர் என்றும் கூறியுள்ளார் வாசகர்.
பைனாகுலர் மூலம் வெளிநாட்டு பணிப்பெண் மற்றும் ஊழியர்களின் நெருங்கிய நடத்தைகளை அவர் உளவு பார்த்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
இவரின் செயல்கள் சகிக்க முடியாத ஒன்று என விமர்சித்ததோடு, வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தனிமைக்கான உரிமை உண்டு என்பதை மேற்கோள் காட்டியுள்ளார் வாசகர்.
பெண் ஒருவரை ஏமாற்றி பலே திட்டம்… தமிழக ஆடவர் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு!