அவங்க இல்லைன்னா சிங்கப்பூர் இல்ல.. வெளிநாட்டு பணியாளர்களை அம்போன்னு விடப்போவதில்லை – அரசின் அறிவிப்பு!

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகளை இன்னமும் அச்சுறுத்தியே வருகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக உலக நாடுகள் தங்களின் இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறியுள்ளன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணியாளர்கள் அதிகம். குறிப்பாக சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம். பாதுகாப்பு, சம்பளம் என சிங்கப்பூரை நாடிய தமிழக இளைஞர்கள் அதிகம். அப்படி நம்பி வந்த பணியாளர்களை கொரோனாவில் இருந்து இமை போல சிங்கப்பூர் அரசு காத்து வருவது மறுக்க முடியாத உண்மை.

சிங்கப்பூர் பிரதமர் இது குறித்து பேசுகையில், “வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து பணியாற்றும் ஊழியர்கள் இந்த சிங்கப்பூரை உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்கள் நலனில் நாங்கள் அக்கறை கொள்கிறோம். ஒருவேளை நான் பேசுவதை வெளிநாட்டு வாழ் ஊழியர்களின் குடும்பத்தினர் பார்த்தால், அவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

உங்கள் கணவரோ, உங்கள் மகனோ, உங்கள் அப்பாவோ இங்கு இருந்தால், அவர்களை நாங்கள் பத்திரமாகவே திரும்ப அனுப்புவோம். மேலும் இந்த கடினமான காலங்களைக் கடந்து செல்ல வேண்டும்” எனத் தெரிவித்து இருந்தார்.

சிங்கப்பூரின் ஒவ்வொரு கட்டிடத்திலும், நிறுவனத்திலும், சாலையிலும் வெளிநாட்டு பணியாளர்களுன் உழைப்பு உள்ளது. அப்படிப்பட்ட பணியாளர்களை கடினமான சூழல் ஒன்றில் சிறப்பாக கவனித்து வருகிறது சிங்கப்பூர்.

தற்போது கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் சிங்கப்பூர் தன் இயல்பு வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமென்பதே அங்கு வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.