சட்டத்திற்கு புறம்பான சதி வேலையில் ஈடுபட்டு சிக்கிய 3 வெளிநாட்டவர்கள்

foreigners illegal activity mbs-casino
Google Maps

சட்டத்திற்கு புறம்பான சதி வேலையில் ஈடுபட்ட வெளிநாட்டவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் உள்ள Baccarat table விளையாட்டில் கொடுக்கப்பட்ட கார்டுகளைப் பதிவு செய்ய தடைசெய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில் மலேசியர் ஒருவர் பிடிபட்டார்.

சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியதற்கு உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகை, தள்ளுபடி, குறைந்த விலையில் சேவை – அதிரடி அறிவிப்பு

சாய் ஹீ கியோங் என்ற 45 வயதுமிக்க அவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று நள்ளிரவு 2 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர் எல்லைதாண்டிய மோசடி கும்பலை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது, இது ஒரு கூட்டுச் சதித்திட்டம் என்றும் செல்லப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 8 அன்று, ராயல் மலேசியா காவல்துறையின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் மலேசியாவில் அவர் கைது செய்யப்பட்டார் என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றம் சாய்க்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவர், அதே நாளில் சிங்கப்பூர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும், 27 வயதான தைவான் நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவர் மீதும், 35 வயதான இன்னொரு மலேசியர் மீதும் எல்லைதாண்டிய மோசடியில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று போலீசார் கூறியுள்ளனர்.

மொத்தமாக 9 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

விசாரணையில், S$700,000 க்கும் அதிகமான மதிப்புள்ள சூதாட்ட சிப்கள், மொபைல் போன் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

முன் உறுப்பில் கை வைத்து பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டு நபர் கைது