“வித்தியாசமாக எதையோ கண்டேன்” என கடற்கரையில் இருந்து தெறித்து ஓடிய சிறுவன் – விரைந்து வந்த போலீஸ்

-found-something-boy-10-discovers-foetal-remains

பாசிர் ரிஸ் பூங்காவில் மணலில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன், தாம் எதையோ வித்தியாசமாக கண்டுபிடித்ததாக கூச்சலிட்டு பீதியுடன் தனது தாயிடம் திடீரென ஓடிவந்தார்.

அதனை அடுத்து பதற்றமடைந்த தாய் அது என்ன என்பதை கண்டறிய அதனை கூர்ந்து கவனித்தார். அதன் பின்னர் கான்கிரீட் ஸ்லாப்பின் கீழ் இருந்த அது குழந்தையின் முதிர்கரு என்பது கண்டறிப்பட்டது.

“உக்காந்து எத்தனை ரயில் போகுதுனு எண்ணினால் வேலை” – லட்ச கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்த தமிழக ஊழியர்கள்

இச்சம்பவம் கிறிஸ்மஸ் முதல்நாள் அன்று இரவு 10 மணியளவில் நடந்ததாக Lianhe Zaobao செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) தெரிவித்தது.

அதனை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, பாசிர் ரிஸ் பூங்காவில் கடந்த டிசம்பர் 24 அன்று இரவு 10.13 மணிக்கு உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் பகிர்ந்துகொண்டனர். அதன் பின்னர் சுமார் 20 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அதனை அடுத்து, BBQ பிட் 21 க்கு அருகிலுள்ள கடற்கரையில் ஒரு முதிர்கரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.