இந்த 8 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தனிமை உத்தரவை அவர்கள் வசிக்கும் இடங்களில் நிறைவேற்றலாம்!

(Photo: Roslan Rahman / AFP/Getty Images)

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், விரைவில் தங்கள் வசிப்பிடத்திலேயே ‘வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை’ நிறைவேற்ற முடியும்.

இனி ஒதுக்கப்படும் பிரத்யேக இட வசதியில் அவர்கள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டியது இல்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்தது.

சிங்கப்பூரில் தற்போது 128 தொற்று குழுமங்கள் கண்காணிப்பில்…

வரும் ஆகஸ்ட் 20 இரவு 11.59 முதல் குறிப்பிட்ட அந்த நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இது நடைமுறைப்படுத்தப்படும்.

8 நாடுகள்:

  • ஆஸ்திரேலியா
  • ஆஸ்திரியா
  • கனடா
  • ஜெர்மனி
  • இத்தாலி
  • நார்வே
  • தென் கொரியா
  • சுவிட்சர்லாந்து

மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு அந்த நடைமுறை பொருந்தும்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக 42வது மரணம்!