ஏப்ரல் 1 முதல், முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.
சிங்கப்பூர் வந்தவுடன் மேற்கொள்ளப்படும் On-arrival tests சோதனைகள் முற்றிலும் அகற்றப்படும்.
அதாவது, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சாங்கி ஜூவல் உட்பட விமான நிலையத்திலும் ஷாப்பிங் செய்து அமர்ந்து உணவருந்தலாம்.
பயணக் கட்டுப்பாடுகளை ஏன் தற்போது அதிக அளவில் எளிதாக்கப்படும்? என்பதை பிரதமர் லீ சியென் லூங் விளக்கினார்.
முன்னதாக ஓமிக்ரான் தாக்கத்தின் நிச்சயமற்ற நிலை காரணமாக சிங்கப்பூர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை இருந்ததாக அவர் கூறினார்.
“இப்போது ஓமிக்ரான் நிலைமை நன்றாகக் கட்டுக்குள் உள்ளது. ஏறக்குறைய அனைத்து பாதிப்புகளும் சமூக அளவில் ஏற்பட்டவை, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மிகக் குறைந்த விகிதத்தில் மட்டுமே உள்ளனர்” என்று விளக்கம் கூறினார்.
CNA குறிப்பிட்டுள்ள தகவலின் படி, தற்போது டெர்மினல் 1 மற்றும் 3 transit பகுதிகளில் 65 சதவீத கடைகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு டெர்மினல்களின் வருகை அரங்குகளில் உள்ள Lotte Duty Free கடைகள் வரும் மே மாதத்துக்குள் மீண்டும் திறக்கப்படும்.