தேர்தல் பதாகைகள் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இதில் 51 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் இளையர் ஒருவர் காவல்துறை விசாரணையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி..!
புக்கிட் படோக் ஈஸ்ட் அவென்யூ 5 இல் அதிகாலை 1.50 மணியளவில், சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சிக்கு (PSP) சொந்தமான சேதமடைந்த தேர்தல் பதாகையை காவல்துறை அதிகாரிகள் கண்டனர் என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த நாளில், அதே சாலையில் சேதமடைந்த மற்றொரு தேர்தல் பதாகையை பற்றி PSP காவல்துறையிடம் புகார் செய்தது.
விசாரணையில், இரு சுவரொட்டிகளையும் சேதப்படுத்தியதாக நம்பப்படும் நபரின் அடையாளத்தை ஜுராங் காவல் பிரிவின் அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதில் 51 வயதான நபர் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
ஹவ்காங் அவென்யூ 10-இல் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் சேதப்படுத்தியயதாக, அங் மோ கியோ காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேக நபரான இளையரை அடையாளம் கண்டனர்.
13 வயதான அந்த இளையர், தற்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு வழக்குகளுக்கும் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.
எந்தவொரு தேர்தல் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் மாற்றுவது, நீக்குதல் போன்ற குற்றங்களில், குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவருக்கும் S$1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது அதிகபட்சம் 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் பொத்தோங் பாசிர் பிளாட்டுக்குள் சடலம் ஒன்று கண்டெடுப்பு..!