ATMல் பணம் எடுக்க நேரம் ஆனதற்கு கடும் சண்டை; இரத்தம் வழிந்தோட சண்டையிட்டு கொண்டவர்களை தூக்கிய போலீஸ் – வீடியோ

தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தில் (ATM) பணம் எடுக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இருவர் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.

மண்டை உடைந்து இரத்தம் ஓடும் அளவிற்கு நடந்த இந்த சண்டையில், போலீசார் தலையிட்டு அவர்களை கைது செய்தனர்.

“தனி ஆளாக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடியாது, குரூப்பா தான் ஆள் வேணும்”… தந்திரமாக ஏமாற்றிய ஆடவர் – ஏமாந்துபோன அப்பாவி இளைஞர்கள்

இணையத்தில் பரவி வரும் இதுபற்றிய வீடியோ ஒன்றில், தலையின் பின்புறம், சட்டை மற்றும் தரையில் இரத்தத்துடன் ஆடவர் ஒருவர் அமர்ந்திருப்பதை காட்டுகிறது.

இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை மே 12 ஆம் தேதி அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

கெயிலாங்கில் அமைந்துள்ள POSB ATM இயந்திரத்தை பயன்படுத்துவதில் பொறுமை இழந்த ஆடவரால் இந்த சண்டை ஏற்பட்டதாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து செல்வதை காணலாம்.

அன்று இரவு 7.55 மணியளவில் 250 சிம்ஸ் அவென்யூவில் சண்டை நடப்பது குறித்து புகார் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இதில் 43 மற்றும் 53 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தார்.

இது தொடர்பான போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், கேட்பாரற்று கிடந்த 1.450 கிலோ தங்கம்!