கெலாங் கிளப்புக்கு வெளியே சண்டையில் ஈடுபட்டதாக 23 முதல் 24 வயதுடைய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆகஸ்ட் 21 அன்று நள்ளிரவில் நடந்த சண்டையில் 10 ஆண்கள் மற்றும் பெண்கள் குழு ஒன்று கிளப்பிற்கு வெளியே அடாவடித்தனம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.
டோட்டோ டிரா: $2,932,433 ஜாக்பாட் முதல் பரிசு தட்டி சென்ற ஒரே நபர்!
இந்த சம்பவம் குறித்து நள்ளிரவு 1:44 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், 23 வயது ஆடவர் ஒருவர், 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆடவர்களுடன் சேர்ந்து, முன் பகை காரணமாக மற்றொரு 23 வயதுமிக்க மற்றொரு ஆடவருடன் சண்டையிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளானார்கள்.
கைதான நான்கு பேர் மீதும் சண்டையிட்டதாக நேற்று ஆகஸ்டு 24 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
சிங்கப்பூரில் உள்ள 18 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பாதுகாப்பை வலுப்படுத்திய காவல்துறை