கெயிலாங் லோரோங் 1க்கு அருகில் ஆடவர் ஒருவர் தனது இரு கைகளாலும் காரின் முகப்பை அடிக்கும் காட்சி வீடியோவில் சிக்கியது.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி, அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து பின்னர் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது.
அந்த காணொளியில் இடம்பெற்றுள்ள காவல்துறை புகாரின்படி, ஓட்டுநர் அந்த காரை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இரவு உணவு சாப்பிடுவதற்காக அப்பகுதியில் இருந்த அவர், காரில் திரும்பி வந்து பார்த்தபோது காரின் பானெட் இரண்டு இடங்களில் பழுதாகி இருந்தது. மேலும், பக்கவாட்டு கண்ணாடியும் சேதமடைந்துள்ளது.
அந்த நான்கு பேர் கொண்ட குழு டாக்ஸியில் ஒன்றாகச் செல்வதற்கு முன் காரை சேதப்படுத்துவது பற்றி பேசுவதைக் கேட்டதாக ஓட்டுநர் கூறினார்.
இந்த சம்பவத்தின் காட்சிகள் SG Road Vigilante யூடியூப் சேனலில் பகிரப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை!