சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை 12 நாட்களாக காணவில்லை; உதவுங்கள் வாசகர்களே!

Singapore Police Force

சிங்கப்பூரில் காணாமல் போன 15 வயது சிறுமி குறித்து போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிறுமியை 12 நாட்களாக காணவில்லை என்றும், அவர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் 10 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி!

சித்தி நாதிரா ரூஷைசாத் (Siti Nadhirah Roshaizad) என்ற அந்த சிறுமி, கடைசியாக ஜூலை 13 அன்று, பிளாக் 649 பொங்கோல் சென்ட்ரல் பகுதியில் காணப்பட்டார்.

இந்த தகவலை போலீசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) வெளியிட்டனர்.

சிறுமி பற்றி தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கவும்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் மாலுக்குள் நுழைந்த ராட்சத பறவை; வியந்து பார்த்த மக்கள்!