சிங்கப்பூரில் 15 வயது சிறுமியை கிட்டத்தட்ட 9 நாட்களாக காணவில்லை என்று சிங்கப்பூர் போலீசார் கூறியுள்ளனர்.
அவ் யு என் (Aw Yu En) என்ற அந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தால் எங்களுக்கு தெரிவியுங்கள் என சிங்கப்பூர் காவல் படை (SPF) கேட்டுக்கொண்டுள்ளது.
கடைசியாக ஜனவரி 30, 2023 அன்று மதியம் 12 மணியளவில் பிளாக் 162 யிஷுன் ஸ்ட்ரீட் 11 க்கு அருகில் சிறுமி காணப்பட்டார்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீசாரின் ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது ஆன்லைனில் தகவல்களை சமர்ப்பிக்கவும்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று SPF உறுதி கூறியுள்ளது.