பிரம்படி உறுதி! காரை ஓட்டிய ஆண் டிரைவர் மானபங்கம் – பின் சீட்டில் வைத்து.. நா கூச வைக்கும் செயல்!

stolen vehicles Woodlands Yishun -

Grab கார் ஓட்டிய டிரைவர் இரண்டு ஆண்களால் செல்லும் வழியிலேயே மனபங்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 40 வயதான Goh Suet Hong மற்றும்  41 வயதான Neo Wei Meng என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய விரைவுச்சாலையில் இரவு சுமார் 1 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த கொடூர செயல் நடந்துள்ளது.

அப்போது 28 வயது ஆண் டிரைவர்  காரில் ஏறியதும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அவரிடம் வினோதமான முறையில் பேசியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பின்னர், மத்திய விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் டிரைவரை தகாத முறையில் தொட்டனர்.

அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டும், தொடர்ந்து தகாதமுறையில் தொட்டனர்.

விரைவுச்சாலையில் காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருப்பதை கவனித்த பின்னரே அவ்வாறு செய்வதை நிறுத்தினர்.

பிறகு ஒருவர் இறக்கிவிடப்பட்டார். இன்னொருவர் முன்புறம் இருக்கும் பயணி இருக்கைக்கு இடமாறினார். பின்னர், மீண்டும் தொடர்ந்து தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இருவரையும் குறித்த இடத்தில் இறக்கிவிட்ட ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து,  காவல்துறையிடம் புகார் செய்தார்.

ஒருவரை மானபங்கப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் அல்லது இவற்றில் இரண்டு அல்லது மூன்று தண்டனைகள் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.