உட்லண்ட்ஸில் சடலத்தை ஏற்றிச்செல்ல இருந்த பிண ஊர்தியில் தீ; சோகத்தில் மேலும் ஒரு சோகம்

உட்லண்ட்ஸில் இறுதி ஊர்வலம் செல்ல இருந்த பிண ஊர்தி வாகனம் நேற்று செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 9) அன்று தீப்பிடித்து எரிந்தது.

விழிப்போடு இருந்த சிலர் வாளிகளில் தண்ணீரை எடுத்து ஊற்றி பற்றி எரிந்த தீயை விரைவாக அணைத்தனர்.

மரினா பே மிதக்கும் மேடை வெடித்து சிதறும் என பதிவிட்ட நபர் அதிரடி கைது

அதனை அடுத்து, இறுதி ஊர்வலத்திற்கு மற்றொரு பிண ஊர்தி பின்னர் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சம்பவம் அன்று பிற்பகல் 3.50 மணியளவில் பிளாக் 313 உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 31க்கு அருகில் உள்ள கார்பார்க்கில் நடந்தது.

உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்காக அந்த வாகனம் வந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டுவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

அந்த ஒரு வார்த்தை சொன்னதும் கடுப்பான பெண்… பெண்ணை இப்படி சொல்லலாமா; MRT ரயிலில் நடந்த வாக்குவாதம்