பிளாக் 93 ஹென்டர்சன் சாலையில் அமைந்துள்ள ஹவுசிங் போர்டு குடியிருப்பில் இயற்கைக்கு மாறாக நடந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
70 வயது முதியவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை காலை ஒன்பதாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு – சிங்கப்பூரில் குறைவாக பதிவு
அதே வீட்டில் அவரது 67 வயது மனைவியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் 70 வயது முதியவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் பின்னர் அவர் இறந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அக்கம்பக்கத்தினருக்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அந்த வீட்டிலின் தரையில் புழுக்கள் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
அவரின் மனைவியின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.
இந்த மரணம் குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
அறியாமையால் ஏமாந்த வெளிநாட்டு ஊழியர்கள் – 3500 பேர் பணத்தை இழந்த சோகம்