சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதரைச் சந்தித்த அசோசேம் குழு!

Photo: High Commission of India in Singapore Official Facebook page

சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் அசோசியேட்டட் சேம்பர்ஸ் குழு (Associated Chambers of Commerce and Industry of India- ‘ASSOCHAM’), கடந்த நவம்பர் 2- ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரனை நேரில் சந்தித்துப் பேசியது.

பொதுப் போக்குவரத்தில் ஆபத்தில் இருந்த பயணிகளுக்கு உதவிய எட்டு பயணிகளுக்கு விருது!

இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான இரு தரப்பு பொருளாதாரம், வர்த்தகம், தொழில் முதலீடுகள், உள்ளிட்டவைக் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில், அசோசேம்-யைச் சேர்ந்த 5- க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

ஆசையாக வாங்கிய வாகனத்தை அலட்சியத்தினால் தொலைத்து விடாதீர்கள்! – சிங்கப்பூரில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

இதன் மூலம், வருங்காலத்தில் சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் முதலீடுகளை செய்து, அதிக பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.