சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் களைக்கட்டிய இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்!

சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் களைக்கட்டிய இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்!
Photo: Singapore in India

 

77வது இந்திய சுதந்திர தினம், இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, உலக நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுடன், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதைச் செலுத்திக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கிம் மோ லிங்கில் தீ விபத்து – இருவர் மருத்துவமனையில் அனுமதி

அந்த வகையில், சிங்கப்பூரில் உள்ள 31 கிரான்ச் சாலையில் (31 Grange Road) அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 15- ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெற்ற 77-வது இந்திய சுதந்திர தின விழாவில், சிங்கப்பூருக்கான இந்திய செயல் தூதர், தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதைச் செலுத்தினர்.

சிங்கப்பூர் இந்திய தூதரகத்தில் களைக்கட்டிய இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்!
Photo: India In Singapore

அதைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தனர். இதில், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த விழாவில், சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், ராணுவ அதிகாரிகள், கப்பற்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் என 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், சிங்கப்பூருக்கான இந்திய செயல் தூதர் சிறப்புரையாற்றினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை… உணவகங்களில் இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி – செப். முதல் விண்ணப்பிக்கலாம்

முன்னதாக, இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும், பணியாளர்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உறுதிமொழியை ஏற்படுத்துக் கொண்டனர்.