குமரன் பெரியசாமிக்கு பிரியாவிடைக் கொடுத்த இந்திய தூதரக அதிகாரிகள்!

குமரன் பெரியசாமிக்கு பிரியாவிடைக் கொடுத்த இந்திய தூதரக அதிகாரிகள்!
Photo: High Commission of India in Singapore

 

சிங்கப்பூருக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு இந்திய தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தூதரக அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கிப் பிரியாவிடைக் கொடுத்தனர். அத்துடன் அனைவரும் குமரன் பெரியசாமியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் திமோர்- லெஸ்ட்டேவுக்கு பயணம்!

கடந்த 2020- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகப் பணியாற்றியுள்ள குமரன் பெரியசாமி, எகிப்து, லிபியா, பெல்ஜியம், இலங்கை, கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

சிங்கப்பூருக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வளர்ச்சிக்கு தூதரக ரீதியாக, குமரன் பெரியசாமி சிறப்பாக செயல்பட்டுள்ளார். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இந்திய தொழில் அமைப்புகளும் குமரன் பெரியசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியைப் பிடித்த அதிகாரிகள்…. விலை உயர்ந்த கடிகாரங்கள் பறிமுதல்!

கடந்த 1992- ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுச் சேவையில் இணைந்த குமரன் பெரியசாமி, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.