வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி (Ho Chi Minh City) நகரம் வழியாக, திருச்சி, சிங்கப்பூர் இடையே விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக வியட்ஜெட் ஏர் அறிவித்துள்ளது.
வியட்ஜெட் ஏர் நிறுவனம் (VietJet Air) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் நவம்பர் மாதம் 02- ஆம் தேதி முதல் வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி வழியாக, திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் விமான சேவையை வியட்ஜெட் ஏர் வழங்கவுள்ளது. இணைப்பு விமான சேவையானது, இந்த விமான சேவை, ஹோ சி மின் சிட்டி விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.
வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கும், செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் விமான சேவை வழங்கப்படும்.
விமான பயண அட்டவணை, விமான பயண சேவை டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.vietjetair.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.