கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 26ஆம் தேதி அன்று, 83 பொங்கோல் சென்ட்ரலில் உள்ள கடை ஒன்றில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை – சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
இந்த கொள்ளை சம்பவத்தில் 29 வயது ஆணுக்கும் 25 வயதுப் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டனர்.
கடையில் இருந்து ரொக்க பணம் S$11 மற்றும் இதர பொருட்களும் திருடப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.
CCTV மற்றும் போலீஸ் விசாரணைகள் உதவியுடன் அங் மோ கியோ போலீஸ் பிரிவு அதிகாரிகள் அவர்களின் அடையாளங்களை கண்டறிந்தனர்.
இதனை அடுத்து அவர்கள் நேற்று ஜூலை 05 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபணமானால், 10 ஆண்டுகள் வரை இதற்கு சிறை தண்டனையும், அபாரதமும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
சிங்கப்பூரில் 1,200 வெளிநாட்டினருக்கு PR – Permanent Residence அந்தஸ்து…