இந்தோனீசிய மத போதகர் அப்துல் சோமத் பத்துபாரா சிங்கப்பூர் அதிகாரிகளால் சில காலம் கண்காணிக்கப்பட்டு வந்ததாக சட்ட உள்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 16ஆம் தேதி சிங்கப்பூருக்கு நுழைய முயன்ற அவருக்கு, அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, அதே நாளில் பாத்தாமிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜகார்த் தாவிலுள்ள சிங்கப்பூர் தூதரக வளாகத்திலும் மேடானிலுள்ள சிங்கப்பூர்த் துணைத் தூதரகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சிங்கப்பூரில் நுழைவு மறுக்கப்பட்டது முதல் இணையத்தில் இவரது ஆதரவாளர்கள் பதிவேற்றிய கருத்துகளையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.
சிங்கப்பூர் குண்டு வைத்துத் தகர்த்தப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
2001ல் நியூயார்க்கில் நிகழ்ந்த 9/11 தாக்குதலைப் போல உங்கள் நாட்டைத் தாக்குவோம் என்று ஒரு கருத்து பதிவிடப்பட்டிருந்தது.
சிங்கப்பூர் சிறிய நாடு. ஒரேயொரு ஏவுகணையில் எல்லாம் முடிந்துவிடும், என்றும் ஒரு கருத்து வெளியிடப்பட்டது.
இதனை சுட்டிக்காட்டிய அமைச்சர், விரவாத, பிரிவினைவாத போதனைகள் பல இன, பல சமய சிங்கப்பூர் சமூகத்திற்கு ஏற்புடையவை அல்ல என்று தெரிவித்தார்.
இந்தோனீசியாவில் பிரபலமான மதபோதகர் சோமத்தை, இன்ஸ்டகிராமில் 6.5 மில்லியன் பேரும் யூடியூப்பில் 2.7 மில்லியன் பேரும் ஃபேஸ்புக்கில் 700,000 பேரும் பின்பற்றுகின்றனர்.
யூடியூப் காணொளி வழி போதனைகளினால், தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்வது தன்னை சொர்க்கத்திற்கு இட்டுச்செல்லும் என்று சோமத் நம்பியுள்ளார்.