உள்ளூர் அறைகலன் சில்லறை வர்த்தக நிறுவனமான ஹைவ் (Vhive) என்னும் நிறுவனத்தின் கணினியில் ஊடுருவப்பட்டு வாடிக்கையாளர்களிள் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண்கள் மற்றும் முகவரிகள் வெளியாகி உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டான்ஜோங் கடற்கரையில் ஆடவரை தாக்கிய திருக்கை மீன் – பொதுமக்கள் கவனம்
கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தனது கணினித் தகவல் சேமிப்பு முறையில் ஊடுருவல் இருப்பதாக ஹைவ் நிறுவனம் மார்ச் 29ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
இதில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், முகவரிகள், மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண்கள் ஆகிய தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ள இந்த நிலையில் அவர்களின் நிதி சம்பந்தமான தகவல்கள் மற்றும் அடையாள எண்கள் போன்றவை வெளிப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆல்டோஸ் என்னும் ஊடுருவல் குழுமமானது நடந்துள்ள இந்த ஊடுருவலுக்குத் தானே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது, இது அதிகமாக தென்கிழக்கு ஆசியாவில் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
ஹைவ் நிறுவனத்தின் கணினிக்குள் ஒன்பது நாட்களில் மூன்று முறை ஊடுருவியதாகவும் சுமார் 300,000க்கும் அதிகமான தகவல்களைத் திருடி விட்டதாகவும் அந்தக் குழுமம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஹைவ் நிறுவனம் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும், பல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக ஹைவ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு உறுதி கூறியதாக கூறப்பட்டுள்ளது.